Friday, October 28, 2011

என்ன தவம் செய்தாயோ(Enna thavam Seithaayo)

என்ன  தவம்  செய்தாயோ  மரியே  என்ன  தவம்  செய்தாயோ  இம்மான்  ஏசு  உன்னை  அம்மா  வென்றழைக்க 
என்ன  தவம்  செய்தாயோ ....தாயே ....

பெண்களுக்குள்  ஆசீர்  நிரம்ப  பெற்றாய்  எம்  கண்களுக்கு  கருணையை  காட்டி  விட்டாய்
மங்கலங்கள்  பொழிந்தாய்  மரியே  வாழ்க ....(2)
மண்ணுலகம்  எங்கும்  உந்தன்  புகழ்  வாழ்க ....
புகழ்  வாழ்க....உந்தன்  புகழ்  வாழ்க....

என்ன  தவம்  செய்தாயோ....

மண்ணில்  வந்த  தேவன் உன்னில்  பிறந்தார்  அவ்-வின்னோளியின்  சுடரின்  மணிவிலக்கே
அன்னையென்று  உணயே  அண்ணல்  அவந்தந்தான் (2)
இன்னல்  நிறை  உலகினில்  துணையாக  துணையாக  நீ  வர  வேண்டும் ....

என்ன  தவம்  செய்தாயோ....

Thursday, October 27, 2011

திருகரத்தால் தாங்கி (thirukarathaal Thangi)

திருகரத்தால் தாங்கி என்னை திரு சித்தம் போல் நடத்திடுமே
[குயவன் கையில் களிமண்ணாய்  அனுதினமும் வனைந்திடுமே (2)]

ஆழ்கடலில்  அலைகளினால் அசையும் போது என் படகில்
[ஆத்ம நண்பன் ஏசு உண்டு  சேர்ந்திடுவேன் அவர் சமூகம்...(2)]

உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே...
[காரிருளில் நடக்கயிலே தீபமாக வழி நடத்தும்... (2)]

ஏசுவே என்னிடம்(yaesuvae Ennidam)

"ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் நீ வீட்டிற்குள் வர நான் தகுதி அற்றவன் ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் "

ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்
தேடிடும் ஆயனே தேற்றுவாயா   தாகத்தில் நான் வாடினேன்  ...
பேசுகின்ற தெய்வமானால் பேசுமே ஏசுவே நான் வாழுவேன் ...
ஆசையோடு காத்திருந்தேன் பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன் ....

ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்.....

நீ பேசினாய்  ஒளி  வந்தது,நீ பேசினாய் புயல் நின்றது,
நீ பேசினாய் பயம் போனது,நீ பேசினாய் சுகமானது ,
நீ பேசினால்  என் நெஞ்சிலே கனமான சுமை கூட காற்றாகுமே,
நீ பேசினால் என் கண்ணிலே  வடிகின்ற நீர் கூட சுகமாக்குமே...
பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன்...

(ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்.....
தேடிடும் ஆயனே தேற்றுவாயா   தாகத்தில் நான் வாடினேன்  ...)

நீ பேசினாய் உயிர் வந்தது,நீ பேசினாய் பசி நின்றது,
நீ பேசினாய் மனம் திறந்தது,நீ பேசினாய் பிணி  தீர்ந்தது,
நீ பேசினால்  என் வாழ்விலே குறைவான எல்லாமே நிறைவாகுமே
நீ பேசினால் என் தெய்வமே அழியாமல் என் வாழ்வு நிலையாகுமே....
பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன்...


ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்
தேடிடும் ஆயனே தேற்றுவாயா   தாகத்தில் நான் வாடினேன்  ...
பேசுகின்ற தெய்வமானால் பேசுமே ஏசுவே நான் வாழுவேன் ...
ஆசையோடு காத்திருந்தேன் பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன் ....

அலைகடலே(alai Kadalai)

அலைகடலே ..,வான் புவியே..., மலர் கருவே...,
அன்னையை வாழ்த்துங்கள் ...
ஒளிர் சந்திரனே... வான் மீன்களுமே (2)
அன்னையை ஏகமாய் வாழ்த்துங்கள்.....(2)

ஆம் அன்புமாயுள்ள ஈசனின் தாய்தான் சுவர்கினின் மகளாகி உலகில் வந்தாளை .(2)
சர்வாங்கு சுந்தர ஏக புதல்வன் புவி மீது வந்தது இவள் மூலம் அன்றோ ....
அன்றோ....

பூலோக மோகத்தில் மாலாதெனையும்  கண்மணியாய் எனை காப்பவள் அன்றோ ....(2)
எனதாவி என்தாத்மம் எனதுள்ள வரையும் அவள் நாமம்
வாழ்த்தி புகழுவேன் அன்றோ...அன்றோ.....

மாறாத நேசம்(maaratha Naesam)

மாறாத நேசம் எனில் தந்த தேவா மனதென்னும் கோவில் உனக்காக நீ வா....
உளமென்னும்  வீணை கரம் தேடுதே உறவே நீ என்னில் ஸ்வரம் மீட்ட வா.....

மாறாத நேசம்...

ஆறுதல் தேடி அலைகின்ற போது ஆதவன் நீயே ஆறுதல் தந்தாய்(2)
துயரினில்  மூழ்கி  மடிந்திடும் வேலை துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன்
துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன்.....(2)
போற்றுவேன் தேவா  போற்றுவேன் உம் திருவடி பணிந்து போற்றுவேன்.... (2)

மாறாத நேசம்...

உன் அருள்  தேடி உம் பதம் வந்தேன் உலகாளும் தேவா  உன் அருள்  தந்தாய் .(2)
உனக்காக வாழ உறவெல்லாம் துறந்தேன் ...
அழியாத உறவை எனில் வந்து சேர்ந்தாய்...(2)
போற்றுவேன் தேவா  போற்றுவேன் உம் திருவடி பணிந்து போற்றுவேன்.... (2)


 


சம்மதமே இறைவா

சம்மதமே இறைவா ....சம்மதமே தலைவா,....
உம்  மாலையிலே  ஒரு  மலராகவும்  ...பாலையிலே சிறு  மணலாகவும்  வாழ்ந்திட  சம்மதமே.......இறைவா  மாறிட சம்மதமே.....சம்மதமே தலைவா...

தயங்கும்  மனதுடைய  நான்  உனக்காகவே  உன்  பணிக்காகவே  வாழ்ந்திட  வரம்  தருவாய் ...(2)
கருவாக  எனை  படைத்தது  உயர்  கண்மணியாய்  எனை  வளர்த்து ...(2)
கரமதிலே  உருப்பதித்து  கருத்துடனே  என்னை  காக்கின்றாய் ...
சம்மதமே இறைவா...............ஆ.....

மலையாய்   நான்  கணித்த  பெரும்  காரியமும்  உயர்  காவியமும்  மறைந்தே  போனது(2 )
திருவாக  உன்னை  நிணைத்து  உயர்  உறவாகவே  நெஞ்சில்  பதித்து  (2)
உன்  பெயரை  சாற்றிடவே  நலம்  பெறவே  என்னை   அழைக்கின்றாய் ....

(சம்மதமே இறைவா)